வியாழனன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார் ரூபா குருநாத் 

வியாழனன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக,   தற்போதைய தலைவர் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
ரூபா குருநாத்
ரூபா குருநாத்

சென்னை: வியாழனன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக,   தற்போதைய தலைவர் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரான என். சீனிவாசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்து வருகிறார். அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)-க்கும் தலைவராக செயல்பட்டார். மேலும் பிரபலமான் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சீனிவாசன் குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும் என சிஓஏ முன்னரே அறிவுறுத்தியிருந்தது. 

வியாழனன்று (26-ஆம் தேதி) நடைபெறவுள்ள மாநில சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ரூபாவுக்கு எதிராக எவரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டார். கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com