இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 
நன்றி: பிசிசிஐ டிவிட்டர்
நன்றி: பிசிசிஐ டிவிட்டர்


இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 

இதில், முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இந்நிலையில், 3-வது டி20 இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால், காலை பெய்த மழையால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வரை மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதனால், இந்த ஆட்டம் ஒரு பந்துகூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது. 

இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான கடைசி 2 டி20 ஆட்டங்கள் முறையே அக்டோபர் 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com