துளிகள்...

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் தீபக் ரவிக்குமார் 301-400 சிசி பிரிவில் பட்டம் வென்றார்.

பாகிஸ்தானில் வரும் 2020 செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தனது பங்கேற்பை உறுதிப்படுத்த ஏதுவாக அடுத்த ஜூன் மாதம் வரை காத்திருப்போம் என பிசிபி சிஇஓ வாஸிம் கான் கூறியுள்ளார். 

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் டிவிஎஸ் ரேஸிங் அணி வீரர் தீபக் ரவிக்குமார் 301-400 சிசி பிரிவில் பட்டம் வென்றார். அனிஷ் ஷெட்டி 201-300, சரத்குமார் 165 சிசி பிரிவுகளில் பட்டம் வென்றனர்.

பெங்களூருவில் நடைபெறவுள்ள தேசிய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 26-ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில் தேர்வு செய்யப்படும் அணி வரும் டிசம்பர் 3-இல் ஆஸி.யில் தொடங்கும் முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ளும்.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வழிகாட்டுதலின்படி, ஐஎஸ்எல் அணியான சென்னையின் எஃப்சி சார்பில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் பேபி லீக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 6, 7, 8 வயதுப் பிரிவுகளில் மொத்தம் 7 பள்ளிகளைச் சேர்ந்த 750 குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com