இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர்-4 ஐ கலாய்த்த யுவராஜ்!

இந்திய கிரிக்கெட் அணியின் 4-வது வீரர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நக்கலாக டிவீட் செய்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்திய கிரிக்கெட் அணியின் 4-வது வீரர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நக்கலாக டிவீட் செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் 4-வது வரிசை பேட்ஸ்மேனுக்கான இடம் நீண்ட நாட்களாகவே பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. அந்த இடத்துக்கு ராயுடு, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், கேஎல் ராகுல் என பல வீரர்களைத் தேர்வு செய்தும், அதற்கான உரிய வீரரைக் கண்டறிய முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால், இந்திய கிரிக்கெட் அணி பல முறை விமரிசனத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பதிவில் நேற்று சூர்யகுமார் யாதவ் குறித்து டிவீட் செய்திருந்தார். அண்மையில் விஜய் ஹசாரே தொடரில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதைக் குறிப்பிட்டு, சூர்யகுமார் யாதவைத் தேர்வு செய்யாமல் இந்திய அணி இன்னும் 4-வது வரிசை பேட்ஸ்மேனைத் தேடி வருவதாக ஒரு மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த மீமை பகிர்ந்தே ஹர்பஜன் சிங் டிவீட் செய்திருந்தார். 

அந்தப் பதிவில், "உள்ளூர் கிரிக்கெட்டில் அதிகளவில் ரன் குவித்த போதும் இவர் ஏன் இன்னும் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரியவில்லை" என்றார். மேலும், கடினமாக உழையுங்கள், உங்களுக்கான நேரம் வரும் என்றும் சூர்யகுமார் யாதவுக்கு ஹர்பஜன் சிங் ஆறுதல் தெரிவித்தார். 

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் இந்த டிவீட்டைப் பகிர்ந்து, அதன் கீழ் கமெண்ட் செய்துள்ள யுவராஜ் சிங், "நான்தான் கூறினேனே! இந்தியாவின் டாப் ஆர்டர் வலிமையாக இருப்பதால் அவர்களுக்கு 4-வது வரிசை பேட்ஸ்மேன் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com