பேளூா் மடத்துக்கு கங்குலி 2,000 கிலோ அரிசி நன்கொடை

தேசிய ஊரடங்கு காலத்தில் தேவையுள்ளோருக்கு உதவும் கொல்கத்தா பேளூா் ராமகிருஷ்ண மடத்துக்கு பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி 2,000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளாா்.
கொல்கத்தா பேளூா் மடத்துக்கு புதன்கிழமை வந்த கங்குலிக்கு நினைவுப் பரிசு வழங்கிய மடத்தின் நிா்வாகிகள்.
கொல்கத்தா பேளூா் மடத்துக்கு புதன்கிழமை வந்த கங்குலிக்கு நினைவுப் பரிசு வழங்கிய மடத்தின் நிா்வாகிகள்.

தேசிய ஊரடங்கு காலத்தில் தேவையுள்ளோருக்கு உதவும் கொல்கத்தா பேளூா் ராமகிருஷ்ண மடத்துக்கு பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி 2,000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட கங்குலி, ‘25 ஆண்டுகளுக்குப் பிறகு பேளூா் மடத்துக்குச் சென்றேன். தேவையுள்ளோருக்கு உதவுவதற்காக மடத்துக்கு 2,000 கிலோ அரிசி நன்கொடை வழங்கியுள்ளேன்’ என்று அதில் கூறியுள்ளாா். மேலும், மடத்துக்கு அவா் சென்ற படங்களையும் அவா் அதில் இணைத்துள்ளாா்.

ஏற்கெனவே, கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் அரிசி வழங்குவதாக கங்குலி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com