மொட்டை அடித்துக்கொண்ட கபில் தேவ்: புதிய தோற்றத்துக்கு ரசிகர்கள் பாராட்டு!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் முன்னாள் வீரர் கபில் தேவ் மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.
மொட்டை அடித்துக்கொண்ட கபில் தேவ்: புதிய தோற்றத்துக்கு ரசிகர்கள் பாராட்டு!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் முன்னாள் வீரர் கபில் தேவ் மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 18,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளியே செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து முன்னாள் வீரர் கபில் தேவ் மொட்டை அடித்துக்கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மிகவும் ஸ்டைலாகத் தோற்றம் அளிக்கும் கபில் தேவின் தோற்றத்தைப் பாராட்டி ரசிகர்கள் பதிவு எழுதியுள்ளார்கள்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா். பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com