ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை சனா மிர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை சனா மிர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

15 வருடங்களாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்த 34 வயது சனா மிர், 226 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2009 முதல் 2017 வரை 137 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார்.

2005-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான சனா மிர், 120 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 151 விக்கெட்டுகளும் 106 டி20 ஆட்டங்களில் விளையாடி 89 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொண்டார் சனா மிர். இதையடுத்து பாகிஸ்தானின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் 2020 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com