ஐபிஎல் போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆர்சிபி அணி கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் கோலி ட்விட்டரில் கூறியதாவது:
எல்லாவற்றையும் விட விசுவாசம் மிகவும் முக்கியம். ஐபிஎல் போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒருமுறை கூட பெங்களூர் அணி கோப்பையை வென்றதில்லை. மூன்று முறை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அந்த அணி ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து 2-ம் இடமே பிடித்துள்ளது.