ரஷியாவில் கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அதிபர் புதினின் மகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மிகவும் ஆர்வத்துடன் உள்ளோம். இது சரியாக அமைந்துவிட்டால் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும். பாராட்டுகள் என்றார்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் அஸ்வின் விளையாடவுள்ளார். a