கரோனாவிலிருந்து மீண்டு வந்தார் கருண் நாயர்: ஐபிஎல் போட்டியில் பங்கேற்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார்...
கரோனாவிலிருந்து மீண்டு வந்தார் கருண் நாயர்: ஐபிஎல் போட்டியில் பங்கேற்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கருண் நாயர் கடந்த இரு வாரங்களாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 8 அன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள கருண் நாயர் அடுத்ததாக மூன்று கரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்பிறகு தான் அவரால் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல முடியும். கரோனா இல்லை என்று உறுதியான வீரர்கள் மட்டுமே ஆகஸ்ட் 20 அன்று துபை செல்லவுள்ளார்கள். 

2018, 2019 ஐபிஎல் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கருண் நாயர். 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பவர்களில் கரோனாவால் பாதிக்கப்படும் 2-வது நபராக கருண் நாயர் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com