கெயிலுக்கு அடுத்ததாக சர்வானும் சிபில் போட்டியிலிருந்து விலகல்

2020 சிபிஎல் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக சர்வான் தெரிவித்துள்ளார். 
கெயிலுக்கு அடுத்ததாக சர்வானும் சிபில் போட்டியிலிருந்து விலகல்

2020 சிபிஎல் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக சர்வான் தெரிவித்துள்ளார். 

இந்த வருட சிபிஎல் டி20 போட்டி, ஆகஸ்ட் 18-ல் தொடங்கவுள்ளது. டிரினிடாடில் உள்ள இரு மைதானங்களில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று செப்டம்பர் 10-ல் நடைபெறுகிறது.  48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.

சொந்தக் காரணங்களுக்காக இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் அறிவித்தார். தற்போது, ஜமைக்கா அணியின் உதவிப் பயிற்சியாளரான சர்வானும் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கருத்துவேறுபாடு காரணமாக கெயிலும் சர்வானும் சமீபத்தில் மோதிக்கொண்டார்கள். ஜமைக்கா அணி தன்னைத் தக்கவைத்துக்கொள்ளாததற்கு சர்வானே காரணம் என அவரைக் கடுமையாக விமரிசித்திருந்தார் கெயில். இந்நிலையில் தற்போது இருவருமே இந்த வருட சிபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com