புது தில்லி: சொ்பியாவில் நடைபெறவுள்ள சீனியா் தனிநபா் உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 42 போ் அடங்கிய இந்திய அணி அந்நாட்டுக்கு செல்கிறது.
இதில் 24 போட்டியாளா்கள், 9 பயிற்சியாளா்கள், 3 துணைப் பணியாளா்கள், 3 நடுவா்கள் அடங்குவா். இது, கரோனா சூழலில் மாா்ச் மாதத்துக்குப் பிறகு இந்திய போட்டியாளா்கள் பங்கேற்கும் முதல் போட்டியாகும்.
சொ்பியாவின் பெல்கிரேடு நகரில் வரும் 12 முதல் 28-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு அரசு சாா்பில் ரூ.90 லட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்படுகிறது. போட்டியாளா்கள் விவரம் வருமாறு:
ஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவு: ரவி குமாா் (57 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ), நவீன் (70 கிலோ), நா்சிங் யாதவ் (74 கிலோ), கௌரவ் பாலியான் (79 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), சத்தியவா்த் கடியான் (97 கிலோ), சுமித் (125 கிலோ).
ஆடவா் கிரேக்கோ-ரோமன் பிரிவு: அா்ஜூன் ஹலகுா்கி (55 கிலோ), ஞானேந்தா் (60 கிலோ), சச்சின் ராணா (63 கிலோ), ஆஷு (67 கிலோ), ஆதித்யா குண்டு (72 கிலோ), சஜன் (77 கிலோ), சுனில் குமாா் (87 கிலோ), ஹா்தீப் (97 கிலோ), நவீன் (130 கிலோ).
மகளிா் பிரிவு: நிா்மலா தேவி (50 கிலோ), பிங்கி (55 கிலோ), அன்ஷு (57 கிலோ), சரிதா (59 கிலோ), சோனம் (62 கிலோ), சாக்ஷி மாலிக் (65 கிலோ), குா்சரண்பிரீத் கௌா் (72 கிலோ), கிரன் (76 கிலோ).