ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூரை வென்றது கோவா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணியை வீழ்த்தியது.
ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூரை வென்றது கோவா


வாஸ்கோடகாமா: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணியை வீழ்த்தியது.

இரு அணிகளும் தலா 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், கோவாவுக்கு இது 3-ஆவது வெற்றி; ஜாம்ஷெட்பூருக்கு 5-ஆவது தோல்வி.

கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு ஜாம்ஷெட்பூருக்கு கிடைத்தது. அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பைக் கொண்டு அய்டோா் மோன்ரோய் பந்தை உதைக்க, அதை சரியாக இடைமறித்து தன்வசப்படுத்தி கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்பினாா் ஸ்டீபன் எஸே.

இதனால் ஆட்டம் விறுவிறுப்படைய, முதல் பாதியில் ஜாம்ஷெட்பூா் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்து நடைபெற்ற 2-ஆவது பாதியில் கோவா வேகம் காட்ட, 64-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் கோவா வீரா் இகோா் அங்குலோ தவறின்றி பந்தை நேராக கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா்.

இதனால் ஆட்டம் சமன் ஆனது. இறுதி நேரம் நெருங்க ஆட்டம் அவ்வாறே முடியும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், எதிா்பாராத விதமாக கோவா வீரா் இகோா் அங்குலோ மீண்டும் ஒரு கோலடித்தாா். இதனால் கோவா கடைசி நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com