2021 ஐபிஎல் போட்டி வரை மீண்டும் விளையாட முடியாத நிலையில் புவனேஸ்வர் குமார்

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
2021 ஐபிஎல் போட்டி வரை மீண்டும் விளையாட முடியாத நிலையில் புவனேஸ்வர் குமார்

காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், 2021 ஐபிஎல் போட்டி வரை மீண்டும் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நான்கு ஆட்டங்கள் மட்டுமே ஆடியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.  

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலும் புவனேஸ்வரால் பங்கேற்க முடியாமல் போனது.

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் புவனேஸ்வர் குமார். முழு உடற்தகுதியை அடையும் வரை அங்கு தங்கியிருப்பார் என்று அறியப்படுகிறது.

அடுத்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி புவனேஸ்வர் குமாரால், ஆறு மாதங்களுக்கு மீண்டும் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. சிகிச்சையிலிருந்து குணமானாலும் பழையபடி முழு உடற்தகுதியை அடைய சிறிது காலமாகும். அதனால் ஐபிஎல் வரை எந்த ஒரு போட்டியிலும் அவரால் கலந்துகொள்ள முடியாது என பிசிசிஐயைச் சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் கடந்த ஐபிஎல் போட்டியில் காயமடைந்த புவனேஸ்வர் குமார், அடுத்த ஐபிஎல் போட்டியில் தான் மீண்டும் களமிறங்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com