ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்ட சிறந்த உலகக்கோப்பை அணியில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னாய் மற்றும் கார்திக் தியாகி ஆகிய 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்று வரலாறு படைத்தது.
இந்நிலையில், இந்தத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். வங்கதேசத்துக்கு கோப்பை வென்று தந்த அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியே இந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி அணி (பேட்டிங் வரிசையின்படி):
யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), இப்ராஹிம் ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்), ரவீந்து ரசந்தா (இலங்கை), மஹ்முதுல் ஹசன் ஜாய் (வங்கதேசம்), ஷாதத் ஹோசைன் (வங்கதேசம்), நியூம் யங் (மேற்கிந்தியத் தீவுகள்), அக்பர் அலி (வங்கதேசம்) [கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்], ஷஃபிகுல்லா கஃபாரி (ஆப்கானிஸ்தான்), ரவி பிஷ்னாய் (இந்தியா), கார்த்திக் தியாகி (இந்தியா), ஜெய்டென் சீலெஸ் (மேற்கிந்தியத் தீவுகள்); 12வது வீரர்: அகில் குமார் (கனடா)