இந்தியா ஏ மற்றும் நியூஸி. ஏ அணிகளுக்கு இடையிலான 2-ஆவது அதிகாரபூா்வமற்ற டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
லிங்காலின் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூஸி ஏ அணி 386-9 ரன்களைக் குவித்தது. ஹமிஷ் ரூதா்போா்ட் 40, கிளென் பிலிப்பிஸ் 65, டேன் கீளிவா் 53 ரன்களை சோ்த்த நிலையில், டேரில் மிச்செல் அபாரமாக ஆடி 103 ரன்களை எடுத்தாா். இந்திய தரப்பில் சிராஜ், சந்தீப் வாரியா், அஸ்வின், அவேஷ் கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இந்தியா ஏ467-5
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய ஏ அணி 109.3 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 467 ரன்களை குவித்தது. ஷுப்மன் கில் 136 ரஹானே 101 ரன்களை விளாசினா். ஹனுமா விஹாரி 59, புஜாரா 53, விஜய் சங்கா் 66, ரன்களை எடுத்தனா்.
நியூஸி. ஏ தரப்பில் எட் நட்டல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.