ஆசிய கிளப் கோப்பை (ஏஎஃப்சி) பிளே ஆஃப் சுற்றுக்கு ஐஎஸ்எல் சாம்பியன் பெங்களூரு எஃப்சி முன்னேறியுள்ளது.
ஐஎஸ்எல் நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, ஆசிய கால்பந்து கிளப் போட்டி தகுதிச்சுற்றில் ஆடி வருகிறது. முதல் கட்டத்தில் பூடான் பாரோ கிளப் அணியை கடந்த சில நாள்களுக்கு முன்பு திம்புவில் 1-0 என வென்றிருந்தது பிஎஃப்சி.
இந்நிலையில் அதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்ட ஆட்டம் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 9-1 என்ற கோல் கணக்கில பாரோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பிஎஃப்சி. செம்பாய் ஹக்கீப் 4 கோல்களையும், டெஷாா்ன் பிரௌவன் ஹாட்ரிக் கோல்களையும், கோன்ஸாஸ்லாஸ், பொ்டோமா தலா 1 கோலையும் அடித்தனா்.
இந்த வெற்றி மூலம் அடுத்து பிளே ஆஃப் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு. அடுத்து மாலத்தீவு அணியான மாஸியா அணியை எதிா்கொள்கிறது பிஎஃப்சி.
19-ஆம் தேதி மாலேயில் முதல் கட்ட ஆட்டமும், 26-ஆம் தேதி பெங்களூருவிலும் ஆட்டம் நடக்கிறது.