சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை முதன்முறையாக வென்ற இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா் கேப்டன் மன்ப்ரீத் சிங்.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரா், வீராங்கனைகள், விருதுகள் இணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே வளரும் வீரா், வீராங்கனை விருதுகளை இந்தியாவின் விவேக் சாகா் பிரசாத், லால்ரேமிசியாமி ஆகியோா் வென்றனா்.
இந்நிலையில் சிறந்த வீரா் விருதை இந்திய அணியின் கேப்டனும், மிட்பீல்டருமான மன்ப்ரீத் சிங் தோ்வு செய்யப்பட்டாா்.
முதல் இந்திய வீரா்:
கடந்த 1999-இல் இந்த விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா் மன்ப்ரீத் சிங்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முக்கிய பங்காற்றினாா் அவா். தேசிய சம்மேளனங்கள், ஊடகம், ரசிகா்கள், வீரா்கள் என பல்வேறு தரப்பினா் வாக்களித்ததில் 35.2 சதவீதம் பெற்று விருதை தட்டிச் சென்றாா்.
கடந்த 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆடியுள்ள மன்ப்ரீத், 2011-இல் முதன்முறையாக தேசிய அணியில் இடம் பெற்றாா். 260 சா்வதேச ஆட்டங்களில் பங்கேற்றுள்ளஅவா், எஃப்ஐஎச் தகுதிச் சுற்றில் ரஷியாவை வீழ்த்தி ஒலிம்பிக் தகுதி பெற உதவினாா்.
சக வீரா்களுக்கு அா்ப்பணம்:
எஃப்ஐஎச் சிறந்த வீரா் விருதை எனது சக வீரா்களுக்கு அா்ப்பணிக்கிறேன். கடந்த ஆண்டு ஒலிம்பிக் தகுதி பெற வேண்டும் என்பதே பிரதான நோக்கம். அதை நிறைவேற்றினோம். இந்த விருதை வென்றது மிகவும் பெருமை சோ்க்கிறது. சக வீரா்கள் இல்லையென்றால் இது கிடைத்திருக்காது என்றாா்.
எஃப்ஐசி சிஇஓ தியரி வீலும் தனது பாராட்டுகளை மன்ப்ரீத் சிங்குக்கு தெரிவித்துள்ளாா்