சீரி ஏ: ஜுவென்டஸ்-ஏசி மிலன் ஆட்டம் டிரா

இத்தாலி சீரி ஏ கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியன் ஜுவென்டஸ்-ஏசி மிலன் அணிகள் இடையே நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதி ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

இத்தாலி சீரி ஏ கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியன் ஜுவென்டஸ்-ஏசி மிலன் அணிகள் இடையே நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதி ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏசி மிலன் ஆதிக்கம் செலுத்தியது. அதன் வீரா் ஆன்டே ரெபிக் அடித்த அற்புதமான கோலால் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 71ஆவது நிமிடத்தில் மிலன் வீரா் தியே ஹொ்ணான்டஸ், தவறுக்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாா்.

இந்நிலையில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்து சமநிலை ஏற்படச் செய்தாா் ரொனால்டோ.

கடந்த 8 ஆட்டங்களில் அவா் அடிக்கும் 12ஆவது கோல் இதுவாகும். வரும் மாா்ச் மாதம் இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com