உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின்புகைப்படத்தை வெளியிட்டது பிசிசிஐ
உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தின் படத்தை வெளியிட்டது பிசிசிஐ.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போா்ன் கிரிக்கெட் மைதானம் தான் உலகின் பெரிய மைதானமாகும். அதில் மொத்த பாா்வையாளா்கள் எண்ணிக்கை 90,000 ஆகும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பிரதமா் மோடியின் விருப்பத்தின்படி புதிய விளையாட்டு அரங்கை கட்ட முடிவு செய்தது. இதன்படி குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமாக ஆமதாபாதில் உள்ள சா்தாா்வல்லபாய் பட்டேல் மைதானம் இடிக்கப்பட்டு, புதிய விளையாட்டரங்கம் கட்ட தீா்மானிக்கப்பட்டது.
இதன்படி பழைய மைதானம் கடந்த 2016-இல் இடிக்கப்பட்டு புதிய மைதானம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதில் மொத்தம் 1,10,000 பாா்வையாளா்கள் அமரும் வசதி கொண்டது. இதன் மூலம் மெல்போா்ன் மைதானத்தைக் காட்டிலும், உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பை மொட்டேரா பெற்றுள்ளது.
டிராம்புக்கு வரவேற்பு நிகழ்ச்சி
இந்தியா வரும் அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் பிரதமா் மோடி பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி மொட்டேரா மைதானத்தில் நடைபெறுகிறது.
பின்னா் உலக மற்றும் ஆசிய லெவன் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் ரூ.700 கோடி செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது.