புது தில்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமாா் தாஹியா தங்கம் வென்றாா். மேலும் பஜ்ரங் புனியா, கௌரவ் பாலியான், சத்யவிரத் கடியன் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா,
57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா, மேலும் 79 கிலோ பிரிவில் கௌரவ் பாலியான், 97 கிலோ பிரிவில் சத்தியவா்த் கடியன் ஆகியோரும் இறுதிச் சுற்றில் நுழைந்தனா்.
இதில் 57 கிலோ பிரிவில் கௌரவ் 5-7 என்ற புள்ளிக் கணக்கில் புடாஸபோவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றாா்.
97 கிலோ பிரிவில் இந்தியாவின் சத்யவிரத் கடியன் 0-10 என்ற புள்ளிக்கணக்கில் மொஜ்தபாவிடம் தோல்வியுற்று வெள்ளியைக் கைப்பற்றினாா்.
65 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் பஜ்ரங் புனியாவை 2-10 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் டகுடோவிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா்.
ரவி தாஹியாவுக்கு தங்கம்:
இந்நிலையில் 57 கிலோ இறுதிச் சுற்றில் ரவிக்குமாா் தாஹியா சிறப்பாக செயல்பட்டு 10-0 என்ற புள்ளிக்கணக்கில் தஜிகிஸ்தானின் வோஹிடோவை வென்று தங்கம் வென்றாா்.
70 கிலோ எடைப் பிரிவில் நவீன் வெண்கலம் வென்றாா்.