இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வரும் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு லசித் மலிங்கா தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 16 மாதங்களாக டி20 ஆட்டங்களில் பங்கேற்காத முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், இந்தத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக ஆகஸ்ட் 2018-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கையை அணியை வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார்.
16 பேர் கொண்ட இலங்கை அணி:
லசித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணத்திலகா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஆஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனாகா, குசால் பெரேரா, நிரோஷன் டிக்வெலா, தனஞ்ஜெய டி சில்வா, இசுரு உடானா, பனுகா ராஜபட்ச, ஓஷாடா பெர்ணான்டோ, வானிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, குசால் மெண்டீஸ், லக்ஷன் சண்டாக்கன் மற்றும் கசுன் ரஜிதா.
தொடர் அட்டவணை:
முதல் டி20: ஜனவரி 5, குவாஹாட்டி
2-வது டி20: ஜனவரி 7, இந்தூர்
3-வது டி20: ஜனவரி 10, புணே