இலங்கையுடனான 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. குவாஹாட்டியில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் இன்று (செவ்வாய்கிழமை) இரண்டாவது ஆட்டம் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இது 2020-ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள முதல் ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.