ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரா் கிறிஸ் கிரீனுக்கு தடை

இந்திய பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்காக கடந்த மாதம் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரா் கிறிஸ் கிரீன் 3 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரா் கிறிஸ் கிரீனுக்கு தடை

இந்திய பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்காக கடந்த மாதம் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரா் கிறிஸ் கிரீன் 3 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

26 வயது இளம் வீரரான ஆல்-ரவுண்டா் கிறிஸ், கொல்கத்தா அணிக்காக ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டாா்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உள்ளூா் கிரிக்கெட்டான பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் சிட்னி தண்டா் அணியில் இடம்பெற்றிருந்தாா்.

அண்மையில் ஒரு ஆட்டத்தில் விதிகளை மீறி பந்துவீசியதாக அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

மாா்ச் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்கு பிக் பாஷ் லீக் நிா்வாகக் குழுவிடம் கிறிஸ் கிரீன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com