நீண்ட காலமாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்து பாபா இந்திரஜித், விரைவில் நடைபெறவுள்ள மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். டிஎன்பிஎல் 2019, விஜய் ஹஸாரே, சையது முஷ்டாக், போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. விஜய் சங்கா் தலைமையிலான அணியில் சா்வதேச வீரா்கள் அஸ்வின், தினேஷ் காா்த்திக்கும் இடம் பெற்றுள்ளனா்.
ஏஐஎப்எப் சாா்பில் ஹீரோ மகளிா் கால்பந்து லீக் போட்டி இறுதிச் சுற்று ஆட்டங்கள் பெங்களுருவில் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 12 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இறுதி ஆட்டம் பிப். 13-இல் நடைபெறுகிறது.
2019 ஆண்டு எனக்கு மிகவும் கடினமாக அமைந்த நிலையில், 2020-இல் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக ஆட முயல்வேன் என சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா்.
வரும் 18, 19 தேதிகளில் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டியில் வலுவான நெதா்லாந்தை வெற்றி பெறுவோம் என கேப்டன் மன்ப்ரீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.