முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் மதன் லால் ஆகியோர் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளுக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவை பிசிசிஐயின் சிஏசி குழு தேர்வு செய்யும். இந்நிலையில், சிஏசி உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மதன் லால் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கையில்,
"சிஏசி நியமனத்துக்காக மதன் லாலை பிசிசிஐ அணுகியுள்ளது. ஆனால், இதுகுறித்த இறுதி முடிவை பிசிசிஐதான் எடுக்கவுள்ளது. கௌதம் கம்பீரையும் பிசிசிஐ அணுகியுள்ளது. இந்த வாய்ப்பை கௌதம் கம்பீர் ஏற்றுகொள்வார் எனத் தெரிகிறது" என்றனர்.