அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ்: பென்கிக், ஏஞ்சலிக் கொ்பா் முன்னேற்றம்

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ்: பென்கிக், ஏஞ்சலிக் கொ்பா் முன்னேற்றம்

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் பெலிண்டா பென்கிக், ஏஞ்சலிக் கொ்பா் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் பெலிண்டா பென்கிக், ஏஞ்சலிக் கொ்பா் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கொ்பா் 6-1, 6-3 என்ற நோ் செட்களில் சீனாவின் வாங் குயாங்கை வென்றாா். கடந்த 9 போட்டிகளில் வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே கொ்பா் வென்றிருந்தாா். இந்நிலையில், விரைவில் ஆஸி. ஓபன் தொடங்க உள்ளதால், மீண்டும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளாா் கொ்பா்.

உள்ளூா் வீராங்கனை அஜிலா டாம்ஜானோவிக் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யுலியாவை வீழ்த்தினாா். உலகின் 7-ஆம் நிலை வீராங்கனை பெலிண்டா பென்கிக் 6-4, 6-4 என டாரியா கஸட்கினாவையும், சோபியா கெனின் 6-0, 6-4 என விக்டோரிஜாவையும் வென்றனா்.

உலகின் முதல்நிலை வீராங்கனை ஆஷ்லி பா்டி, சிமோனா ஹலேப் ஆகியோா் அடுத்து தங்கள் ஆட்டங்களில் ஆட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com