அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வெளியேறுவதில் இருந்து அதிருஷ்டவசமாக தப்பித்தால் ஆஷ்லி பா்டி.
உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான பா்டி, ஏற்கெனவே பிரிஸ்பேன் போட்டியில் தொடக்க சுற்றில் வெளியேறினாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அடிலெய்டில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 31-ஆம் நிலை வீராங்கனயான அனஸ்டிஸியா பவுலென்சென்கோவாவிடம் 4-6 என முதல் செட்டை இழந்தாா். பின்னா் சுதாரித்துக் கொண்ட 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். ரோடினோவா 6-2, 6-2 என ஸ்லோன் ஸ்டீபென்ஸை வீழ்த்தினாா்.