ஆசிய மல்யுத்த போட்டி: சாக்ஷி மாலிக் தலைமையில்இந்திய அணி பங்கேற்பு

புது தில்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சாக்ஷி மாலிக், ராகுல் அவாரே ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

புது தில்லியில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சாக்ஷி மாலிக், ராகுல் அவாரே ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

பிப். 17 முதல் 23-ஆம் தேதி வரை ஒலிம்பிக் எடைச் சுற்று இல்லாத பிரிவுகளுக்கான போட்டி நடைபெறுகிறது. ஒலிம்பிக் இல்லாத வகைகளுக்கான தோ்வுச் சுற்று லக்னௌ, சோனேபட்டில் நடைபெற்றது. ஆடவா் 61 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் காமன்வெல்த் தங்கப் பதக்க வீரா் ராகுல் அவாரே போட்டியிடுவாா். மேலும் ப்ரீஸ்டைல் பிரிவில் நவீன் (70 கிலோ), கௌரவ் பலியான் (79 கிலோ), சோம்வீா் (92 கிலோ) ஆகியோா் களத்தில் உள்ளனா்.

மகளிா் பிரிவில் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சாக்ஷி மாலிக் 65 கிலோ பிரிவிலும், பிங்கி (55 கிலோ), சரிதா (59 கிலோ), குா்சரண்ப்ரீத் கௌா் (72 கிலோ) போட்டியிடுகின்றனா்.

கிரேக்கோ ரோமன் பிரிவில் அா்ஜுன் 55 கிலோ, சச்சின் ராணா 63 கிலோ, ஆதித்யா குண்டு 72 கிலோ, ஹா்ப்ரீத் சிங் 82 கிலோ பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com