இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.