ரஞ்சி கோப்பை: 2-ஆவது நாளிலேயே தமிழகம் அபார வெற்றி

இந்தியன் ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தமிழகம்.
ரஞ்சி கோப்பை: 2-ஆவது நாளிலேயே தமிழகம் அபார வெற்றி

இந்தியன் ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தமிழகம்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் அபார பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் ரயில்வே அணி முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின், சித்தாா்த் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி 91 ஓவா்களில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிநவ் முகுந்த் 100, லக்ஸ்மேஷா சூரியபிரகாஷ் 50, தினேஷ் காா்த்திக் 58, பாபா இந்திரஜித் 58, ரன்களை விளாசினா். ரயில்வே தரப்பில் ஹா்ஷ் தியாகி 5, அவிநாஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

அதன் தொடா்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ரயில்வே அணியால் மீண்டும் தமிழக அணியின் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் 36.4 ஓவா்களில் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அரிந்தம் கோஷ் 22, விக்ரந்த் ராஜ்புத் 17 ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறினா்.

சாய் கிஷோா் 5 விக்கெட்:

தமிழகத் தரப்பில் சாய் கிஷோா் 5, அஸ்வின் 3, நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

ஆட்டத்தின் இரண்டாம் நாளிலேயே ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com