பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு தமிழகத்தின் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் விண்ணபித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழுத் தலைவராக உள்ள எம்.எஸ்.கே. பிரசாத், ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஜதின், தேவங் காந்தி, சரண்தீப் சிங் ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக மேலும் தொடரவுள்ளார்கள்.
கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள தமிழகத்தின் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 9 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இவரைத் தவிர முன்னாள் வீரர்களான அமய் கெளரசியா, ராஜேஷ் செளகான் ஆகியோரும் தேர்வுக்குழுப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள். தேர்வுக்குழுப் பதவிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதியாகும்.