இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஒரு மாற்றம். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை.
ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு ரன் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ரன்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது இந்திய அணி.