பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலியின் சகோதரர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்துச் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கங்குலி.
சிநேகஷிஷ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராக உள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலியும் அவருடைய சகோதரரும் ஒரே வீட்டில் வசிப்பதால் தற்போது சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கங்குலி. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு அவரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.
சிநேகஷிஷ் கங்குலியின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.