ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்
ஐபிஎல் போட்டியில் விளையாட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடைபெறுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் போட்டியில் விளையாட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது நல்ல அனுபவம். ஐபிஎல்-லில் விளையாடுவதும் அதில் பங்கேற்பதும் எனக்கு விருப்பமானவை. ஆனால் இன்னும் பல தகவல்கள் நமக்கு வரவேண்டும். அதற்குப் பிறகுதான் இறுதி முடிவை எடுக்க முடியும். எந்தவொரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.