யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் நெ.1 வீராங்கனை விலகல்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் நெ.1 வீராங்கனையான பார்டி விலகியுள்ளார். 
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் நெ.1 வீராங்கனை விலகல்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் நெ.1 வீராங்கனையான ஆஷ்லி பார்டி விலகியுள்ளார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது.  மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 வயது ஆஷ்லி பார்டி உலகின் நெ.1 வீராங்கனையாக உள்ளார். 2019 பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இந்நிலையில் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்பதில்லை என பார்டி முடிவெடுத்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள பார்டி, செப்டம்பரில் தொடங்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com