ரிக்கி பாண்டிங்கை விடவும் தோனி சிறந்த கேப்டன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே. 2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங்கை விடவும் தோனி சிறந்த கேப்டன் என சாஹித் அப்ரிடி கூறியுள்ளார். ட்விட்டரில் ரசிகர்களுடனான உரையாடலில் இதற்கான காரணத்தை அவர் கூறியதாவது:
பாண்டிங்கை விடவும் தோனியைத்தான் சிறந்த கேப்டனாகக் கூறுவேன். காரணம், இளைஞர்களைக் கொண்ட ஒரு புதிய அணியை அவர் உருவாக்கினார் என்றார்.