இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியின் பயிற்சியாளர் அசோக் முஸ்தஃபி உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 86.
வங்காள அணிக்காக இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள அசோக், பிறகு பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். கங்குலி உள்ளிட்ட பல வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் அசோக்கிடம் கங்குலி பயிற்சி பெற்றுள்ளார்.
வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அவிஷேக் கூறியதாவது: அசோக் மரணமடைந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை அவர் மெருகேற்றியுள்ளார் என்றார்.