ஆகஸ்ட் 15 முதல் இந்தியாவில் பயிற்சி முகாம்: தில்லி கேபிடல்ஸ் அணி திட்டம்

ஆகஸ்ட் 15 முதல் இந்திய வீரர்களைக் கொண்டு தில்லியில் பயிற்சி முகாமை நடத்த தில்லி கேபிடல்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் இந்தியாவில் பயிற்சி முகாம்: தில்லி கேபிடல்ஸ் அணி திட்டம்

ஆகஸ்ட் 15 முதல் இந்திய வீரர்களைக் கொண்டு தில்லியில் பயிற்சி முகாமை நடத்த தில்லி கேபிடல்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஆகஸ்ட் 15 முதல் இந்திய வீரர்களைக் கொண்டு தில்லியில் பயிற்சி முகாமை நடத்த தில்லி கேபிடல்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக வரும் ஞாயிறன்று ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 8 ஐபிஎல் அணிகளும் 50 நாள்களில் 60 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், போட்டி அட்டவணை, கரோனா அச்சுறுத்தல் காரணமாக எடுக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என ஐபிஎல் போட்டி பற்றிய அனைத்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

எனவே இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டு பயிற்சி முகாம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என தில்லி கேபிடல்ஸ் அணித் தரப்பு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com