இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி

2022 ஏஎஃப்சி மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதியளித்துள்ளது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு.
இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி
2022 ஏஎஃப்சி மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதியளித்துள்ளது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு.
அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்துக்கு ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் இதுபற்றிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் மூலம் இந்தியாவில் மகளிர் கால்பந்து வளர்ச்சி பெறும் என அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல் கூறியுள்ளார்.
2021-ம் ஆண்டு ஃபிஃபா யு-17 மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை இப்போட்டி நடைபெறுகிறது. 2017-ல் ஃபிஃபா யு-17 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்தியது. மேலும் 2016-ல் ஏஎஃப்சி யு-16 சாம்பியன்ஷிப் போட்டியையும் இந்தியா நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com