காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார்.
தன்னுடைய காயம் குறித்து ஃபெடரர் கூறியதாவது:
அனைவரும் நலமாக, பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சில வாரங்களுக்கு முன்பு எனது காலில் காயம் ஏற்பட்டது. 2017-ல் எடுத்த நடவடிக்கை போல காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளேன். இதன்மூலம் நல்ல உடற்தகுதியுடன் முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியும். இதனால் போட்டிகளையும் ரசிகர்களையும் நான் இழப்பேன். எனினும் 2021 ஆரம்பத்தில் அனைவரையும் டென்னிஸ் போட்டிகளில் சந்திக்க ஆவலாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
ஆடவர் டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முதலிடத்தில் உள்ளார் 38 வயது ஃபெடரர். இவருடைய போட்டியாளர்களான நடால் (19), ஜோகோவிச் (17) ஆகிய இருவரும் ஃபெடரரின் சாதனையைத் தொட முயன்று வருகிறார்கள். இந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் ஃபெடரர் தோல்வியடைந்தார்.