2007-ல் டி20 உலகக் கோப்பை
2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை
2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை
2013, ஜூன் 23 அன்று சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்கிற பெருமையை அடைந்தார் தோனி.
பிர்மிங்ஹாமில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்று மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனான ஜடேஜாவும் தொடர் நாயகனாக ஷிகர் தவனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன்மூலம் டி20, ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்கிற பெருமையை தோனி அடைந்தார்.
தோனி சாதனை நிகழ்த்தி ஏழு வருடங்கள் ஆனதையொட்டி ஐசிசி ட்வீட் வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் தோனிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.