2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகரால், தான் அவமதிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் சங்கர் பேசியதாவது:
பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன்பு சில வீரர்கள் இணைந்து காபி குடிப்பதற்காக வெளியே சென்றோம். அப்போது எங்கள் அருகே வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் எங்களை இழிவுபடுத்தினார். இதை பதிவும் செய்துகொண்டார். எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது எனக்குக் கிடைத்த முதல் அனுபவம் அது. எங்கள் இழிவுபடுத்தி அதைப் பதிவும் செய்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்து அவர் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அந்த ஆட்டத்துக்கு முன்பு தினேஷ் கார்த்திக் என்னுடன் இருந்ததால் என்னால் அழுத்தத்தைக் குறைத்து, இயல்பாக சிரித்துப் பேசி இருக்க முடிந்தது என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாத்தில் (டிஎல்எஸ் முறையில்) வென்றது. ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்த விஜய் சங்கர், வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார்.