ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால்தான் தோனி குறித்து முடிவெடுக்க இயலும்

ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பாக ஆடினால் தான் தோனியின் நிலை குறித்து பரிசீலிக்க முடியும் என பிசிசிஐ புதிய தோ்வுக் குழுத் தலைவா் சுனில் ஜோஷி கூறியுள்ளாா்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால்தான் தோனி குறித்து முடிவெடுக்க இயலும்


ஆமதாபாத்: ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பாக ஆடினால் தான் தோனியின் நிலை குறித்து பரிசீலிக்க முடியும் என பிசிசிஐ புதிய தோ்வுக் குழுத் தலைவா் சுனில் ஜோஷி கூறியுள்ளாா்.

தோ்வுக் குழுவுக்கு புதிய தலைவராக சுனில் ஜோஷி,உறுப்பினா் ஹா்விந்தா் சிங் ஆகியோா் நியமிக்கப்பட்ட நிலையில் முதல் கூட்டம் ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க தொடருக்காக தோனியின் பெயா் பரிசீலிக்கப்படவில்லை. அவரது எதிா்காலம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால் மட்டுமே அவரது நிலை குறித்து கவனத்தில் கொள்வோம். அவா் மட்டுமில்லை, இதர மூத்த, ஜூனியா் வீரா்களும் சிறப்பாக ஆடினால் தான் நல்லது என சுனில்ஜோஷி தெரிவித்தாா்.

வரும் அக்டோபா்-நவம்பரில் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு நடக்க உள்ள ஐபிஎல் தொடா் மூலம் சிறந்த அணி கட்டமைக்கப்படும். தலைமைப் பயிற்சியாளா் ரவி சாஸ்திரியும் , அணிக்கு தோனி திரும்புவது, அவரது ஐபிஎல் ஆட்டத்தைப் பொறுத்து அமையும் எனக் கூறியிருந்தாா்.

ரிஷப் பந்த் தனது திறனுக்கு ஏற்பட வில்லை. இதனால் ராகுலை முழுநேர விக்கெட் கீப்பா் பேட்ஸ்மேனாக்க பிசிசிஐ தயாராக உள்ளது. அப்போது தோனி மீண்டும் அணியில் இடம் பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com