கரோனா எதிரொலி: ஐபிஎல் ஆட்டங்களின்போது மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு?

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, யாருமில்லா மைதானத்தில்...
கரோனா எதிரொலி: ஐபிஎல் ஆட்டங்களின்போது மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு?

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, யாருமில்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 4,379-ஆக உயா்ந்துள்ளது. இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டியின் ஆட்சிக் குழு கூடவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏப்ரல் 15 வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வது சந்தேகமாகியுள்ளது. மேலும் ஓர் இடத்தில் பல ஆயிரம் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் வெளிநாடுகளைச் சோ்ந்த பல வீரா்கள் கலந்து கொள்வாா்கள். ஒவ்வொரு ஆட்டத்தையும் மைதானத்தில் சுமாா் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பாா்வையிட உள்ளனா். போட்டிகளைக் காண வரும் யாருக்காவது கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது மற்றவா்களுக்கும் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது. இதனால், ஐபிஎல் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்திய விளையாட்டுத்துறை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இன்று கூறியதாவது: 

இந்தியாவில் நடைபெறவுள்ள எல்லா சர்வதேச நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை அனைத்து விளையாட்டுச் சங்கங்களும் பின்பற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஐபிஎல் போட்டியை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மட்டும் கூறியுள்ளோம். நாட்டு மக்களின் சுகாதார நலனுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். ஐபிஎல் போட்டியைக் காண வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரக்கூடாது. வேறு எதை விடவும் நாட்டின் நலன் தான் முக்கியம். ஐபிஎல் ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என்றால் போட்டி அமைப்பாளர்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும். அது இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாது. 

ஐபிஎல் போட்டியை நிறுத்த நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆட்டத்தை நடத்த நீங்கள் முயன்றால், விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்றுதான் சொல்கிறோம். மக்களின் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஏப்ரல் 15 வரை ஐபிஎல் ஆட்டங்களை நேரில் பார்க்க ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. யாருமில்லா மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. எனினும் ஐபிஎல் போட்டியின் ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தான் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com