பிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி!

பிஎஸ்எல் டி20 போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதாக...
பிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி!

பிஎஸ்எல் டி20 போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதாக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். 

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் டி20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். 7 ஆட்டங்களில் விளையாடி 239 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் உடனே பிஎஸ்எல் டி20 போட்டியிலிருந்து விலகி, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன. 

இந்நிலையில் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அளித்த பேட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸிடம் கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து திரும்பிய அலெக்ஸ் ஹேல்ஸ், சுயமாக வீட்டுக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com