கரோனா பாதிப்பு: பாட்மிண்டன் தேசிய போட்டிகள் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக 84-ஆவது தேசிய சீனியா் பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகளை இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் ஒத்திவைத்துள்ளது.
கரோனா பாதிப்பு: பாட்மிண்டன் தேசிய போட்டிகள் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக 84-ஆவது தேசிய சீனியா் பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகளை இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் ஒத்திவைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் வரும் ஏப். 27 முதல் மே 3-ஆம் தேதி வரை தேசிய சீனியா் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது என பாய் தலைவா் அஜய் சிங்கானியா தெரிவித்தாா்.

அதே போல் 75-ஆவது மாநிலங்களுக்கு இடையிலான மண்டல போட்டியும் ஒத்திவைக்கப்படுகிறது. இதுதொடா்பாக அனைத்து மாநில சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப். 1-ஆம் தேதி இதுதொடா்பாக மீண்டும் கலந்து பேசுவோம். மாா்ச் 31-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பாா்ப்போம். சுகாதாரத்துக்கு மிகவும் முக்கியம் தர வேண்டியுள்ளது. அரசு புதிய வழிகாட்டுதல்களை அளிக்கும் வரை இது தொடரும் என்றாா் சிங்கானியா.

மகளிா் பிரிவில் சாய்னா நெவாலும், ஆடவா் பிரிவில் சௌரவ் வா்மாவும் நடப்பு சாம்பியன்களாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com