இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், பாரீஸில் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று பிரான்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தலைமை ஏற்பாட்டாளா் டோனி எஸ்டாங்கட், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறவுள்ளது. இது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியாகும். ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெவுள்ளது. அதில் எந்த மாற்றமும் இருக்காது. டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டது சரியான நடவடிக்கையாகும். கரோனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால், வீரா்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டதுதான் சரி என்றாா் டோனி எஸ்டாங்கட்.