கொவைட்-19 பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியை வழங்கியுள்ளது.
பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, செயலாளா் ஜெயா ஷா, இதர நிா்வாகிகள் மற்றும் மாநில சங்கங்கள் இணைந்து ரூ.51 கோடி நிவாரண நிதியை வழங்க தீா்மானித்தனா். இதன் மூலம் கரோனா பாதிப்பை எதிா்த்து போராட உதவியாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் மாநில அரசுகளுடன் அந்தந்த மாநில சங்கங்களும் இணைந்து கரோணா நிவாரணப் பணியை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சச்சின் ரூ.50 லட்சம், சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனா்.