நவம்பரில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
நவம்பரில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் 2021-ல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 போட்டி நடைபெறவுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.